என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரியாபட்டி அருகே முதியவர் தற்கொலை
Byமாலை மலர்28 Sep 2021 11:16 AM GMT (Updated: 28 Sep 2021 11:16 AM GMT)
காரியாபட்டி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பறையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 70). இவருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்றுவலி இருந்ததாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் வயிற்று வலி சரியாகாததால் விரக்தியடைந்த வெள்ளைச்சாமி பறையங்குளம் சுடுகாடு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக அவரது மகன் கணேசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த வெள்ளைச்சாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி வெள்ளைச்சாமி இறந்தார். இதுகுறித்து ஏ. முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X