என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்கு
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் மருதன் கோன்விடுதி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை நடத்தியபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த 90 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து முகமது அலி, முகமது யூசுப், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






