search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்

    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 3-வது கட்டமாக நடந்த முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
    பெரம்பலூர்:

    கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 3-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி 3-வது கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 198 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 251 இடங்களிலும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு சென்றனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. ஆனால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் சில முகாம்களில் காலையிலேயே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் அந்த முகாம்கள் மதியத்திற்குள் முடிந்து விட்டன. முகாம்களை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

    Next Story
    ×