search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட தம்பதியர்
    X
    கொலை செய்யப்பட்ட தம்பதியர்

    கடலூர் ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து இவ்வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தீவிர விசாரணை நடத்தி 15 பேரை குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு விசாரணை கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

    வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
    Next Story
    ×