search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டம்
    X
    வேலூர் மாவட்டம்

    உள்ளாட்சி தேர்தல்- வேலூர் மாவட்டத்தில் 8170 பேர் மனுதாக்கல்

    வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 8170 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
    வேலூர்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 8170 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேரும், 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 741 பேரும், 247 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1192 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் 2079 பதவிக்கு 6144 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
    Next Story
    ×