என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்22 Sep 2021 6:28 PM GMT (Updated: 22 Sep 2021 6:28 PM GMT)
கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி சோக்காடி அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). சம்பவத்தன்று இவர் மனைவியுடன் மொபட்டில் மோரமடுவு கூட்டு ரோடு அருகில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் மற்றொரு மோட்டார்சைக்கிளில் பாலேகுளியை சேர்ந்த முருகன் (24) , பி.மருதேப்பள்ளியை சேர்ந்த தங்கவேல் (21) ஆகியோர் வந்தனர். அவர்கள் ராஜேந்திரன் மீது மோதுவதை போல வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் கேட்டார்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜேந்திரனை, முருகனும், தங்கவேலும் சேர்ந்து தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன், தங்கவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X