search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

    ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் மோரனப்பள்ளி சுவாகத் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ சுப்பிரமணியன் (வயது 54). தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவை திறந்து உள்ளே இருந்த 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். இது குறித்து இளங்கோ சுப்பிரமணியன் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×