search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    கோபிசெட்டிபாளையத்தில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர் ‘சஸ்பெண்டு’

    கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதியில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானங்களை விற்பனையாளர் அர்ச்சுணன் (43) என்பவர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன் இது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது பற்றி தெரியவந்ததும் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் அர்ச்சுணனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளிலும் விலைப்பட்டியலை நுகர்வோர் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும் எனவும், விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது எனவும் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×