search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தூசி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

    தூசி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள வயலாத்தூர் கிராமத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் மேற்கண்ட பகுதியில் தீவிர ரோந்துச் சென்றபோது, அதே கிராமத்தில் பள்ளத்தெருவைச் சேர்ந்த முனுசாமி (வயது 55), சிகாமணி (40), சீனிவாசன் (45) ஆகியோர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×