search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மரங்களில் ஆணி அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஒவ்வொரு நிறுவனத்தினரும் தலா 100 மரக்கன்று நடவு செய்து பராமரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    அவிநாசி:

    ரோட்டோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவிநாசி தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அவிநாசி நடுவச்சேரி ஊராட்சி கருக்கன்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், தாசில்தார் ராவியிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

    கிராம ஊராட்சிகளில் ரோட்டோரம் உள்ள அரசுக்கு சொந்தமான மரங்களின் மீது சிலர் ஆணி அடித்து அவர்களது நிறுவனத்தின் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். இதனால் மரங்கள் சேதமடையும். அவற்றின் வாழ்நாள் குறையும். 

    இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தினரும் தலா, 100 மரக்கன்று நடவு செய்து பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
    Next Story
    ×