என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
Byமாலை மலர்19 Sep 2021 9:57 AM GMT (Updated: 19 Sep 2021 9:57 AM GMT)
நெல்லையில் மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
களக்காடு:
நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுத்தெரு, தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகியநம்பி (வயது 58). சம்பவத்தன்று அழகியநம்பி தனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.
மலையடிபுதூர் நவாச்சாலையில் வந்த போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் சரிந்து விழுந்தது. இதில் அழகியநம்பி படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுத்தெரு, தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகியநம்பி (வயது 58). சம்பவத்தன்று அழகியநம்பி தனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.
மலையடிபுதூர் நவாச்சாலையில் வந்த போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் சரிந்து விழுந்தது. இதில் அழகியநம்பி படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X