என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவைனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி
பண்ருட்டி:
துப்பாளையம் கிழக்கு தெரு சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 40) இவர் சென்னையில் கார் டிரைவராக இருந்தார். அவரது மனைவி நதியா. இவர்களுக்கு 2மகன், ஒருமகள் உள்ளனர்.
கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. பைனாஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கும், நதியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அதன்பின்னர் ஜெகதீசன் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவிந்தராசுவும், நதியாவும் அடிக்கடி உல்லாசமாக இருந்துவந்தனர்.
இதை அறிந்த ஜெகதீசன் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால் கோவிந்தராசுவும், நதியாவும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோவிந்தராசுவும், நதியாவும் அவரது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் ஜெகதீசனை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த திட்டத்தை நதியா அவரது கள்ளக்காதலன் கோவிந்தராசுவிடம் தெரிவித்துள்ளார். அவரும் இதற்கு சம்மதித்துள்ளார்.
நேற்று காலை கணவன், மனைவிக்கும் கள்ளகாதல் விவகாரமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே நதியா கள்ளக்காதலன் கோவிந்தராசுக்கு போன் செய்து வரவழைத்து கணவன் ஜெகதீசனை, நதியா கள்ளக்காதலனுடன் சேர்ந்து மண்வெட்டியால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்தில் ஜெகதீசன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பினர்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி. பொறுப்பு ராஜேந்திரன், பயிற்சி போலீஸ் டி.எஸ்.பி. சத்யா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சமேதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜெகதீசன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து தப்பமுயன்ற மனைவி நதியாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் கள்ளக்காதலன் கோவிந்தராசு தப்பி ஓடிவிட்டார். உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று கோவிந்தராசுவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்