என் மலர்
செய்திகள்

தொழிலாளி பலி
சங்கராபுரம் அருகே தவறி விழுந்த தொழிலாளி பலி
சங்கராபுரம் அருகே தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). தொழிலாளியான இவர் கடந்த 6 மாதங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மயக்க நிலையில் இருந்த முருகேசன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






