search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாநகராட்சி பகுதியில் நாளை 200 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

    பஸ் நிலையங்கள் மார்க்கெட், கடைவீதிகள், சினிமா தியேட்டர்கள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
    வேலூர்:

    தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 880 இடங்களில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மாநகராட்சி பகுதியில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 1,038 நர்சுகள் உட்பட 3 ஆயிரம் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    பஸ் நிலையங்கள் மார்க்கெட், கடைவீதிகள், சினிமா தியேட்டர்கள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

    மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.

    பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். அனைத்து வாகனங்களின் டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படடுள்ளது.
    Next Story
    ×