என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
Byமாலை மலர்18 Sep 2021 11:37 AM GMT (Updated: 18 Sep 2021 11:37 AM GMT)
காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). இவர் பாணாவரம் பகுதியில் துணை மின் நிலையத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று பெய்த மழையால் பாணாவரம் அருகே உள்ள கோடம்பாக்கம் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள் ரவி, குமார், குமரேசன் ஆகியோர் இன்று காலை 7 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது குமரேசன் டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரிசெய்ய மேலே ஏறினார்.
எதிர்பாராத விதமாக குமரேசன் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கருகி பலியானார்.
கீழே இருந்த ரவி மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ரவியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த குமரேசனின் உடல் டிரான்ஸ்பார்மர் அருகே ½ மணி நேரம் கிடந்துள்ளது.
இதுகுறித்து குமரேசனின் மனைவி தனலட்சுமி பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமரேசனின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி மின்ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). இவர் பாணாவரம் பகுதியில் துணை மின் நிலையத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று பெய்த மழையால் பாணாவரம் அருகே உள்ள கோடம்பாக்கம் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள் ரவி, குமார், குமரேசன் ஆகியோர் இன்று காலை 7 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது குமரேசன் டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரிசெய்ய மேலே ஏறினார்.
எதிர்பாராத விதமாக குமரேசன் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கருகி பலியானார்.
கீழே இருந்த ரவி மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ரவியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த குமரேசனின் உடல் டிரான்ஸ்பார்மர் அருகே ½ மணி நேரம் கிடந்துள்ளது.
இதுகுறித்து குமரேசனின் மனைவி தனலட்சுமி பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமரேசனின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி மின்ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X