என் மலர்
செய்திகள்

வீராணம் ஏரி
வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்
கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியதால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு போதுமான தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து வீராணம் ஏரி நிரப்பப்பட்டது. கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியதால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.45 அடியாக இருந்தது. அது இன்று காலை 45.30 அடியாக குறைந்தது. பாசனத்துக்கு 312 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக 61 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 96 கனஅடி நீரும், வி.என்.ஆர். மதகு வழியாக 187 கனஅடி நீரும், சி.எஸ்.ஆர். மதகு வழியாக 283 கனஅடி நீரும், கே.கே.எம்.மதகு வழியாக 43 கனஅடி நீரும் ஆக மொத்தம் 609 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
வீராணம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. ஆனால், வெளிப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு போதுமான தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து வீராணம் ஏரி நிரப்பப்பட்டது. கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியதால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.45 அடியாக இருந்தது. அது இன்று காலை 45.30 அடியாக குறைந்தது. பாசனத்துக்கு 312 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக 61 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 96 கனஅடி நீரும், வி.என்.ஆர். மதகு வழியாக 187 கனஅடி நீரும், சி.எஸ்.ஆர். மதகு வழியாக 283 கனஅடி நீரும், கே.கே.எம்.மதகு வழியாக 43 கனஅடி நீரும் ஆக மொத்தம் 609 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
வீராணம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. ஆனால், வெளிப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






