search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி பலி
    X
    தொழிலாளி பலி

    நெல்லையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    நெல்லையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப் பட்டியை அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ் (வயது 60).

    இவர் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மகளை கங்கைகொண்டான் அருகே உள்ள அலங்கார பேரியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

    மகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தனது பேத்தியை பார்ப்பதற்காக தாஸ் அரசு பஸ்சில் கங்கை கொண்டான் சென்றார். நான்குவழிச்சாலை அருகே பஸ்சில் இருந்து இறங்கும்போது, பஸ் நிற்பதற்குள் இறங்கியதால், தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி நசுக்கியது.

    இதில் பலத்த காயமடைந்த தாசை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×