என் மலர்
செய்திகள்

திருட்டு
தாழையூத்து அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
தாழையூத்து அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மேல தாழையூத்தை சேர்ந்தவர் முப் பிடாதி. இவரது மகன் நம்பி (வயது23). நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து தாழையூத்து போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
Next Story






