என் மலர்
செய்திகள்

கொள்ளை
பண்ருட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜன் (வயது 45). இவர் பண்ருட்டி அருகே திருவாமூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தர்மராஜனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்துக்காக அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தர்மராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவியை பார்க்கச் சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் தர்மராஜனின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அவர்கள் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை வீட்டுக்கு வந்த தர்மராஜன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உடனே அவர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜன் (வயது 45). இவர் பண்ருட்டி அருகே திருவாமூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தர்மராஜனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்துக்காக அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தர்மராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவியை பார்க்கச் சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் தர்மராஜனின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அவர்கள் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை வீட்டுக்கு வந்த தர்மராஜன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உடனே அவர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






