என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்15 Sep 2021 6:23 PM GMT (Updated: 15 Sep 2021 6:23 PM GMT)
கீரமங்கலம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பகுதியில் தஞ்சாவூர் நாடார் காலனி பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (வயது 40) என்பவர் ஒரு வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் சென்ற டவுன் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே திருநெல்வேலி மாவட்டம் ருக்குமணி அம்பாள்புரத்தைச் சேர்ந்த அன்புராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரன்ஸ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த லாரன்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அன்புராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X