என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தத்தில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்15 Sep 2021 8:27 AM GMT (Updated: 15 Sep 2021 8:27 AM GMT)
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திருமணம் ஆன 7 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் பெரியார் நகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன்.
இவரது மனைவி நளினி. இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவரது மகள் அபிநயா என்கிற அன்பரசி (வயது 21). இவருக்கும் கே.வி.குப்பம் அடுத்த மேல் காவனூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமராஜன் என்பவருக்கும் கடந்த புதன்கிழமை கே.வி.குப்பத்தில் திருமணம் நடந்தது. ராமராஜன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள பார்மசியில் வேலை செய்து வருகிறார்.
மறு விருந்திற்காக 2 நாட்களுக்கு முன் புதுமண தம்பதிகள் குடியாத்தத்தில் உள்ள அபிநயா வீட்டிற்கு வந்தனர். இன்று காலை சுமார் 9 மணி அளவில் வீட்டில் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டு சேலையால் அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட உறவினர்கள் கணவர் மற்றும் பெற்றோர் உடனடியாக கதவை உடைத்து அபிநயாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபிநயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 நாட்களே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியாத்தம் டவுன் பெரியார் நகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன்.
இவரது மனைவி நளினி. இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவரது மகள் அபிநயா என்கிற அன்பரசி (வயது 21). இவருக்கும் கே.வி.குப்பம் அடுத்த மேல் காவனூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமராஜன் என்பவருக்கும் கடந்த புதன்கிழமை கே.வி.குப்பத்தில் திருமணம் நடந்தது. ராமராஜன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள பார்மசியில் வேலை செய்து வருகிறார்.
மறு விருந்திற்காக 2 நாட்களுக்கு முன் புதுமண தம்பதிகள் குடியாத்தத்தில் உள்ள அபிநயா வீட்டிற்கு வந்தனர். இன்று காலை சுமார் 9 மணி அளவில் வீட்டில் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டு சேலையால் அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட உறவினர்கள் கணவர் மற்றும் பெற்றோர் உடனடியாக கதவை உடைத்து அபிநயாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபிநயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 நாட்களே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X