என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 282 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
Byமாலை மலர்14 Sep 2021 10:44 AM GMT (Updated: 14 Sep 2021 10:44 AM GMT)
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர்:
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6,9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது.
வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 7 பஞ்சாயத்து யூனியன்களில் 14 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 138 பஞ்சாயத்து யூனியன் வார்டுகள், 247 கிராம பஞ்சாயத்துகள், 2 ஆயிரத்து 79 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர், ஓட்டு எண்ணிக்கை மையங்களாக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, துறைரீதியான ஆய்வும் நடந்து முடிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மொத்தம் 282 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் ஓட்டுச் சீட்டுகள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறிய, நடுத்தரம், பெரிய என்ற அளவிலான ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6,9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது.
வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 7 பஞ்சாயத்து யூனியன்களில் 14 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 138 பஞ்சாயத்து யூனியன் வார்டுகள், 247 கிராம பஞ்சாயத்துகள், 2 ஆயிரத்து 79 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர், ஓட்டு எண்ணிக்கை மையங்களாக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, துறைரீதியான ஆய்வும் நடந்து முடிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மொத்தம் 282 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் ஓட்டுச் சீட்டுகள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறிய, நடுத்தரம், பெரிய என்ற அளவிலான ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X