என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

    வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    வேலூர்:

    தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சின்ன குட்டி (வயது 65). இவர் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சின்னகுட்டிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சின்னகுட்டி மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 4-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து உடனடியாக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்ன குட்டிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சின்னகுட்டி உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு ஜெயில்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×