என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 847 இடங்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு:
தமிழகம் முழுவதும் நாளை (12-ந் தேதி) கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 847 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்பு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என மருத்துவக் குழு அறிவித்து உள்ளது.
எனவ பொதுமக்கள் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்