search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காரைக்குடியில் பெண்ணிடம் 14 பவுன் செயின் பறிப்பு

    காரைக்குடியில் பெண்ணிடம் 14 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சந்திரா. இவர்கள் இன்று பக்கத்து தெருவில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்றனர்.

    முத்தூரணி பள்ளி பகுதியில் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சந்திராவை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 14 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் வந்து சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×