என் மலர்
செய்திகள்

விபத்து
ஒரகடம் அருகே விபத்து- காவலாளி பலி
ஒரகடம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் காவலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பட்டவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 60). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் தங்கியிருந்து வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பணி முடிந்து சைக்கிளில் வல்லம் அருகே ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியது.
இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தர்மன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இறந்த தர்மன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பட்டவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 60). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் தங்கியிருந்து வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பணி முடிந்து சைக்கிளில் வல்லம் அருகே ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியது.
இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தர்மன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இறந்த தர்மன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






