என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் 24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல்- 4 பேர் கைது
Byமாலை மலர்7 Sep 2021 3:05 AM GMT (Updated: 7 Sep 2021 3:05 AM GMT)
விருதுநகரில் 24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் பாண்டியன் நகரில் கண்ணன் (வயது 45) என்பவரது கிட்டங்கியில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு 50 கிலோ எடை கொண்ட 484 ரேஷன் அரிசி மூட்டைகளும், 50 கிலோ எடை கொண்ட 29 ரேஷன் கோதுமை மூட்டைகளும் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட ரேஷன் அரிசி 24 ஆயிரத்து 200 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் கோதுமை 1450 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூட்டைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டங்கி உரிமையாளர் கண்ணன், வாடிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24), பாண்டியன் நகரை சேர்ந்த அழகு மூர்த்தி (44), பாத்திமா நகரை சேர்ந்த நாககுமார் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வேன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன்பொருள் பதுக்கலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது பற்றி தொடர் விசாரணை நடைபெறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூட்டைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பார்வையிட்டார்.
விருதுநகர் பாண்டியன் நகரில் கண்ணன் (வயது 45) என்பவரது கிட்டங்கியில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு 50 கிலோ எடை கொண்ட 484 ரேஷன் அரிசி மூட்டைகளும், 50 கிலோ எடை கொண்ட 29 ரேஷன் கோதுமை மூட்டைகளும் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட ரேஷன் அரிசி 24 ஆயிரத்து 200 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் கோதுமை 1450 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூட்டைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டங்கி உரிமையாளர் கண்ணன், வாடிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24), பாண்டியன் நகரை சேர்ந்த அழகு மூர்த்தி (44), பாத்திமா நகரை சேர்ந்த நாககுமார் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வேன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன்பொருள் பதுக்கலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது பற்றி தொடர் விசாரணை நடைபெறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூட்டைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பார்வையிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X