என் மலர்
செய்திகள்

கைது
போளூர் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது
போளூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரைப்பூண்டி செய்யாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த பாக்மார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்ற வாலிபரை கைது செய்து, மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
Next Story






