என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலி
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் புதுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை அரக்கோணம் - திருத்தணி ரெயில் மார்கத்தில் உள்ள மங்கமாபேட்டை ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






