என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லலாம்
Byமாலை மலர்4 Sep 2021 1:43 PM GMT (Updated: 4 Sep 2021 1:43 PM GMT)
மோதலில் ஈடுபட்ட 3 கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை கலைத்தனர்.
வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்பதால் நல்லவாடு, புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த தடை உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. தடை உத்தரவு மேற்கொண்டு நீட்டிக்கப்படவில்லை. நாளை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். மோதலில் ஈடுபட்ட 3 கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X