search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    விருதுநகரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 12½ பவுன் நகை கொள்ளை

    விருதுநகரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 12½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் இளங்கோவன் தெருவை சேர்ந்தவர் விஜயராணி (வயது 57). இவர் அதே பகுதியல் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று விஜய ராணி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்துக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 12½ பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதற்கிடையில் ஊர் திரும்பிய விஜயராணி, வீட்டின் தகவு உடைக்கப்பட்டு நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×