என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்கள் கைது
வேலூர்:
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை ரம்யா பணி முடிந்து பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் 2 பேர் ரம்யா பையில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடிக்க முயன்றனர்.
சுதாரித்துக் கொண்ட ரம்யா சத்தமிட்டார்.பயணிகள் அனைவரும் சேர்ந்து திருட முயன்ற பெண்களை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த விமலா (28). கஸ்தூரி (25). என்பது தெரியவந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே ஈரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆரணி வேலூர் ஆகிய இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. 2 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்