search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூர் பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்கள் கைது

    வேலூர் பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை ரம்யா பணி முடிந்து பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் 2 பேர் ரம்யா பையில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடிக்க முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட ரம்யா சத்தமிட்டார்.பயணிகள் அனைவரும் சேர்ந்து திருட முயன்ற பெண்களை மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களை விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த விமலா (28). கஸ்தூரி (25). என்பது தெரியவந்தது.

    இவர்கள் மீது ஏற்கனவே ஈரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆரணி வேலூர் ஆகிய இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. 2 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×