search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை

    வீட்டுக்குள் புகுந்து வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). மெக்கானிக். இவர் தாய் சாந்தியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு வெங்கடேசன் அருகில் உள்ள பாட்டி பார்வதியின் குடிசை வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கேயே தூங்கினார். அந்த வீட்டில் வாசல் கதவு இல்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் 4 பேர் கும்பல் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

    அவர்கள் பார்வதியின் வீட்டுக்குள் திடீரென நுழைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் வெங்கடேசனும், அவரது பாட்டி பார்வதியும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம கும்பல் வெங்கடேசனை, சரமாரியாக வெட்டினர். தலை கழுத்தில் பலத்த வெட்டுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதற்குள் சத்தம் கேட்டு பாட்டி பார்வதி எழுந்தபோது பேரன் வெங்கடேசன் மர்ம கும்பலால் வெட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டார்.

    இதையடுத்து கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதுகுறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். செங்கடேசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையை சேர்ந்த டோரா கார்த்திக் என்பவர் கொலை வழக்கில் வெங்கடேசன் 5-வது குற்றவாளி ஆவார். மேலும் வெங்கடேசன் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கஞ்சா விற்பனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் எதிர் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த தகராறில் கொலை நடந்ததா? அல்லது டோரா கார்த்திக் கொலைக்கு பழிக்குப் பழியாக வெங்கடேசன் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×