search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கடலூர் அருகே சர்க்கரை ஆலையில் ரோலர் விழுந்து ஊழியர் பலி

    கடலூர் அருகே சர்க்கரை ஆலையில் கன்வேயர் ரோலர் திடீரென்று உடைந்து கீழே விழுந்ததில் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவி. (வயது 51). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது கன்வேயர் ரோலர் திடீரென்று உடைந்து கீழே நின்றிருந்த ரவி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ரவியை சிகிச்சைக்காக மற்ற ஊழியர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×