என் மலர்
செய்திகள்

விபத்து பலி
குருபரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வடமாநில தொழிலாளி பலி
குருபரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
மராட்டிய மாநிலம் பம்ராக்கட் பகுதியை சேர்ந்தவர் விஜய் பிரேம் (வயது 26). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் தங்கி அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் தன்னுடன் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அமீர் ஆசாத் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புளியரசிமேடு என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஜய்பிரேம், முகமது அமீர் ஆசாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய் பிரேம் இறந்தார். முகமது அமீர் ஆசாத் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






