என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- புதிதாக 115 பேருக்கு தொற்று பாதிப்பு
Byமாலை மலர்1 Sep 2021 2:57 AM GMT (Updated: 1 Sep 2021 2:57 AM GMT)
புதுவையில் கொரோனாவுக்கு இதுவரை 1,812 பேர் பலியாகியுள்ளனர். நேற்று உரியிழப்பு ஏதும் இல்லை.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது.
புதுவையில் 158 பேர் மருத்துவமனைகளிலும், 557 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 715 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 67 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் கொரோனாவுக்கு இதுவரை 1,812 பேர் பலியாகியுள்ளனர். நேற்று உரியிழப்பு ஏதும் இல்லை. பலியானோர் எண்ணிக்கை 1.47 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 97.96 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 12 பேரும், முன்களப்பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 123 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 8 லட்சத்து 11 ஆயிரத்து 124 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் சராசரியாக 100-க்கும் குறைவானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று 115 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால், கொரோனாவின் 3-வது அலை பரவ தொடங்கி விட்டதோ? என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது.
புதுவையில் 158 பேர் மருத்துவமனைகளிலும், 557 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 715 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 67 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் கொரோனாவுக்கு இதுவரை 1,812 பேர் பலியாகியுள்ளனர். நேற்று உரியிழப்பு ஏதும் இல்லை. பலியானோர் எண்ணிக்கை 1.47 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 97.96 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 12 பேரும், முன்களப்பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 123 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 8 லட்சத்து 11 ஆயிரத்து 124 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் சராசரியாக 100-க்கும் குறைவானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று 115 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால், கொரோனாவின் 3-வது அலை பரவ தொடங்கி விட்டதோ? என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X