search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    நெல், வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்- ரங்கசாமி உறுதி

    மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் (தி.மு.க.) சிவா எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

    சிவா:- புதுவையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் வேளாண் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தற்போது இன்சூரன்சையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கவேண்டும்.

    செந்தில்குமார் (தி.மு.க.):- இந்த மழையினால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வேளாண்துறையில் 100 ஏக்கர் நிலம்தான் பாதிப்பு என்ற கணக்கு உள்ளது. மற்றவர்கள் நிவாரணத்துக்கு ஏன் பதியவில்லை. இது யார் தவறு?

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- இதுதொடர்பாக வேளாண்துறை இயக்குனரிடம் விவரம் கேட்டு உள்ளேன்.

    நாஜிம் (தி.மு.க.):- காரைக்கால் பகுதியையும் இதில் சேர்க்கவேண்டும்.

    துணை சபாநாயகர் ராஜவேலு:- இது விவசாயிகளின் பிரச்சினை. இதற்காக ஆட்சியை குறைகூற வேண்டாம். அனைவரது கோரிக்கையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்பதுதான்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி:- எங்கள் அரசு விவசாயிகளின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்புக்கு உரிய நிவாரணம் தர அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நாஜிம்:- காரைக்கால் பகுதியில் அரசு நெல் கொள்முதல் செய்யவேண்டும்.

    பி.ஆர்.சிவா (சுயே) தமிழகத்தில் நெல் கொள்முதல் சிறப்பாக செய்யப்படுகிறது. அதேபோல் நாமும் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- நெல் கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்திய உணவுக்கழகத்திடம் பேசி வருகிறோம்.

    செந்தில்குமார்:- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.1,940. ஆனால் நானே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500-க்குத்தான் விற்றேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    Next Story
    ×