என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அறந்தாங்கி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்- வாலிபர் கைது

    அறந்தாங்கி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி போலீசார் நேற்று அழியாநிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் வெள்ளாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர் அழியாநிலையை சேர்ந்த முத்துபாண்டி (வயது 28) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×