search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    X
    பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி - பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

    கொள்ளிடம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சி வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி ராஜகுமாரி. இவரது கூரை வீடு தீயில் எரிந்து நாசமடைந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

    தொடர்ந்து அரசின் நிவாரண உதவியுடன், தனது சொந்த செலவிலும் நிதிஉதவி வழங்கினார். அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், சீர்காழி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், ஊராட்சிதலைவர் வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர்.
    Next Story
    ×