என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தேசூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி டேங்க் ஆபரேட்டர் பலி

    தேசூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி டேங்க் ஆபரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    தேசூரை அடுத்த செங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). தெள்ளார் ஒன்றியம் லட்சுமிபுரத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் உள்ள பசு மாட்டு பாலை செங்கம்பூண்டி கிராமத்தில் கொடுத்து விட்டு சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே செங்கம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், சந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சந்திரன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த முரளி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×