என் மலர்
செய்திகள்

கைது
அரசு மருத்துவமனையில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது
அரசு மருத்துவமனையில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு அய்யப்பன் நகரை சேர்ந்தவர் நேரு, காஞ்சியைச் சேர்ந்த ரவி, வேட்டவலத்தைச் சேர்ந்தவர் விஜி. 3 பேரும் தங்களின் மோட்டார்சைக்கிள்களில் தனித் தனியாக வெவ்வேறு நாட்களில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
அவா்கள் மருத்துவமனை வளாகத்தில் மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது அவர்களின் மோட்டார்சைக்கிள்களை காணவில்லை. மர்ம நபர் யாரோ அவற்றை திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று மருத்துவமனை வளாகத்தில் ஒரு மோட்டார்சைக்கிளை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
அவர், திருப்பத்தூர் மாவட்டம் ஜெலகம்பாறை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38) எனத் தெரிய வந்தது. அவர், மேற்கண்ட நபர்களின் மோட்டார்சைக்கிள்களை திருடியதாக கூறினார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார், கைது செய்து 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






