என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வெறையூர் அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதி வியாபாரி பலி

    வெறையூர் அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணாபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள காட்டு செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சேகர் (வயது 37), சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து பழங்களை விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று சேகர் திருவண்ணாமலையில் இருந்து பழங்களை கொள்முதல் செய்து கொண்டு திருக்கோவிலூரை நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். வெறையூர் அருகே கல்லேரி கிராமத்தில் சென்றபோது நிலைதடுமாறிய ஆட்டோ சாலை ஓரம் இருந்த ஒரு புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த வெறையூர் போலீசார் விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×