search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    அம்மாபேட்டை அருகே பெண் மாயம்- போலீசார் விசாரணை

    அம்மாபேட்டை அருகே மனைவி மாயமானது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர், பழனிசாமி(34). இவருக்கு திருமணமாகி சிவசக்தி (31) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பத்தன்று குருவரெட்டியூர் செலம்பூர் அம்மன் கோவில் அருகே குழந்தைகளை கூட்டிக்கொண்டு பேக்கரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளை விட்டுவிட்டு சிவசக்தி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.

    பின்னர் பழனிசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை என தெரிய வந்தது. பின்னர் அவர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பழனிசாமி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×