search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ஓணம் வாழ்த்து

    ஓணம் பண்டிகையானது புதுச்சேரி மாநில மக்கள் அனைவரது இல்லங்களிலும் எல்லா வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய திருவிழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மாகி பகுதி மக்களுக்கும், புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஓணம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    சாதி, மத வேறுபாடின்றி மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அறுவடை திருநாளாவும், வளமை மற்றும் செழுமையின் அடையாளமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையானது புதுச்சேரி மாநில மக்கள் அனைவரது இல்லங்களிலும் எல்லா வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

    அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புத்தாடை அணிந்து வாசலில் அத்தப்பூ கோலமிட்டு தோரணம் கட்டி மகிழ்ச்சி பொங்க மகாபலி மன்னன் வரவேற்கும் ஓணம் பண்டிகை இன்றளவும் மலையாள மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். மகாபலி மன்னனை வரவேற்கும், அதேவேளையில் இயற்கை அன்னையையும் வணங்கி வரவேற்பது ஓணம் பண்டிகைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும். அதன்படி ஓணம் பண்டிகை திருநாளில் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தியில், ஓணம் பண்டிகை அனைவருக்கும் தேவையான மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தரட்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள துன்பங்களை இத்திருநாள் நீக்கட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×