search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கொத்தனார் பலி

    திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள குளிபிறை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கொத்தனார். இவர், பெருமாநாடு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மலையகோவில் விலக்கு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×