என் மலர்
செய்திகள்

கைது
பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பிளஸ்-1 மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பிளஸ்-1 மாணவி தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்து வந்தார்.
அப்போது நரிக்குடி அருகே உள்ள கூரைக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் மாணவியை, ஆறுமுகம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து மாணவியை மிரட்டியும் அதே செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானதால் ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பிளஸ்-1 மாணவி தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்து வந்தார்.
அப்போது நரிக்குடி அருகே உள்ள கூரைக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் மாணவியை, ஆறுமுகம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து மாணவியை மிரட்டியும் அதே செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானதால் ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Next Story






