என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே விபத்தில் தம்பதி-மகன் காயம்
Byமாலை மலர்16 Aug 2021 1:16 PM GMT (Updated: 16 Aug 2021 1:16 PM GMT)
பெரம்பலூர் அருகே விபத்தில் தம்பதி மற்றும் அவர்களுடைய மகன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
பாடாலூர்:
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நம்புகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 32). இவருடைய மனைவி ராசாத்தி (27), மகன் ருபனேஷ்(7). இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள இரூர் கிராமத்திற்கு வந்துவிட்டு, பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவிளக்குறிச்சி பிரிவு சாலை எதிரில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆலத்தூர் தாசில்தார் அருளானந்தம், 3 பேர் காயமடைந்து கிடப்பதை கண்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தாசில்தார், காயமடைந்த 3 பேரையும் மீட்டு தான் வந்த அரசு வாகனத்தில் ஏற்றி பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X