என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சிவகாசி அருகே வாலிபர் தற்கொலை

    சிவகாசி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அண்ணா காலனி 8-வது தெருவில் வசித்து வந்தவர் முனியாண்டி (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் முனியாண்டிக்கும், மாரீஸ்வரிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவும் வழக்கம்போல் குடும்பதகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மனமுடைந்த முனியாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியாண்டியின் தாய் பாக்கியம், சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×