என் மலர்
செய்திகள்

கைது
கெலமங்கலம் அருகே சூதாடிய 9 பேர் கைது
கெலமங்கலம் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வெள்ளிசந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வரகானப்பள்ளி குமார் (வயது 39), யு.கொத்தப்பள்ளி நாகராஜ் (63), நீலகிரி சஞ்சீவப்பா (58) உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,130 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல சூதாடியதாக சின்ன நாகதுணையை சேர்ந்த நாகராஜ் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






