என் மலர்
செய்திகள்

கைது
கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியலூர் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 2 சிறுவர்கள் சிறிய பொட்டலங்களில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, திருச்சியில் இருந்து செல்போன் கடைகளுக்கு உதிரிபாகங்கள் விற்பதற்கு வந்தபோது, கஞ்சாவும் கொண்டு வந்தது, தெரியவந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியலூர் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 2 சிறுவர்கள் சிறிய பொட்டலங்களில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, திருச்சியில் இருந்து செல்போன் கடைகளுக்கு உதிரிபாகங்கள் விற்பதற்கு வந்தபோது, கஞ்சாவும் கொண்டு வந்தது, தெரியவந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






